ஞாயிறு, 10 பிப்ரவரி, 2008

குறள் வெண்பா

ஈர்க்கும் தமிழ்பேசி ஏய்த்தெத்தி வாழ்ந்திடுவார்             
பார்க்குள் பதராவார் பார்.

பணங்காசின் பித்ததைப் பார்த்தறிந்த பின்னே
இணங்கியுளம் ஏற்றல் இலை.

மூவாற்று நீரும் முழுதும் இழப்பதோ
போவாய் உனக்கேன் பொறுப்பு.

மதவுணர்வு மக்களை மாய்க்கவோ? முற்றும்
மதமதுவும் வேண்டா மறு.

வீழார்; விடுதலைப்போர் வெல்வாரெஞ் செந்தமிழர்
ஈழத் திதுவுறுதி யே!.

2 கருத்துகள்:

அகரம் அமுதா சொன்னது…

/////வீழார்; விடுதலைப்போர் வெல்வாரெஞ் செந்தமிழர்
ஈழத் திதுவுறுதி யே./////


எத்துணை ஒப்பற்ற வரிகள். ஈழத்தில் ஓர்நாள் நிச்சயம் வெற்றிபெறுவான் தமிழன். தங்களின் இக்கவிதை என்னை வெகுவாய் ஈர்த்தது. வாழ்த்துக்கள்.

தமிழநம்பி சொன்னது…

நெஞ்சார்ந்த நன்றி!
- த.ந.