செவ்வாய், 27 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல் - ௰



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல் -
-------------------------------------------------
 
தமிழா,

கூத்து எவரோ பரதர் வகுத்தாராம்!
பரதர் வகுத்தது எப்போது? தமிழ் தோன்றியது எப்போது?

அவன் அப்பனுக்கு அப்பன் ஆயிர அப்பனுக்கு முந்தியது அல்லவா பரதம்!

ஆடுநர்க்கழியும் உலகம் (புறநானூறு)

கூத்தாட் டவைக்குழாம் (திருக்குறள்)

இவற்றுக்கு முன்னதா - பரதன் கூத்து?

வேல் திரித்தாடும் வெற்றிக்கூத்து தொல்காப்பியர் சொல்வது அல்லவா?

முழுமுதல் இறையே தாண்டவன் என்றும் நடவரசன் என்றும் கூத்தரசன் என்றும் சொல்லி வணங்கும் நீ, கோமாளியாக இருந்தால் அல்லாமல் கூத்துக்கலை அயல் வழியது என்பாயா?

கோயில்களில் கூத்தராக எத்தனை எத்தனைபேர்கள் திருத்தளிப் பெண்டு என்று இருந்தனர்.
அவர்கள் கோயில் வளாகத்திலே குடியிருந்து கோயில்பணி செய்தவர் என்பதை அறிவாயா?

ஆடல் கலையில் நூற்றெட்டுக் கரணங்கள், எத்தனை கோயில்களில் கற்சிலையாக்க் கோயில் சுற்றில் வெட்டப்பட்டிருக்கவும்  அதனைக் காணவும் மாட்டாமல் கணகெட்டுப் பரதக்கூத்து என்கிறாயே!

வடநாட்டுக் கோயில்களில் நூற்றெட்டுக் கரணங்கள் காட்டும் சிற்பம் எங்காவது உண்டா?  


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12,13 ., 2017., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006)