வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - க



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - க
================================================================

திருவள்ளுவர் (கி.மு.முதல் நூற்றாண்டு)


திருவள்ளுவர், ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும், அருள் நிறைந்த துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும் ஆரிய முறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும் தமிழ்ப் பண்பாட்டை கிளர்வித்தார்.

நக்கீரர் (கி.பி. 2ஆம் நூற்.)


நக்கீரர், ஆரியம் நன்று, தமிழ் தீது எனவுரைத்த குயக்கொண்டானை அங்கதம் பாடிச் சாவித்து, பின்பு பினர் வேண்டுகோட் கிணங்கி அவனை உயிர்ப்பித்து, தமிழின் உயர்வை மெய்ப்பித்துக் காட்டினார்.

பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்.)


பரஞ்சோதி முனிவர், தம் திருவிளையாடற் புராணத்தில்,

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?
 
- என்று பாடித் தமிழிலக்கண உயர்வை எடுத்துரைத்தார்.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 117, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை17)
--------------------------------------------------------------