எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மே, 2009

இரண்டகர் இரண்டுபேர்!




ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில்!
    உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே 
ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே 
    உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி!
பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்
    பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும் 
சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே 
    சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும்!

            ----------------------------

ஞாயிறு, 17 மே, 2009

புழுவாகிப் போனோம்!



உலகமே! 
நீ குருடா?
செவிடா?

ஐயோ!
உலகில் மாந்த உணர்வே அற்றுப் போனதோ?
ஒரே நாளில் 25000 மாந்த உயிர்கள் சுடப்பட்டும் காயம்பட்டும் எரியுண்டும் பொசுங்கியும் சாவதா?

ஐ.நா. மன்றமே! 
அமெரிக்காவே!
மாந்த உரிமைகள் பற்றிய உங்களின் பேச்செல்லாம் இவ்வளவுதானோ?
, ஈழத்தமிழன் வெள்ளைத் தோலன் இல்லை என்பது காரணமோ? 

உலக நாடுகளே!
உங்கள் நாடுகளில் மாந்த நேயம் பற்றி எந்த அறிஞனும் எழுதவில்லையா? பேசவில்லையா?
ஈழத்தமிழருக்கு இன்று நேர்வது நாளை யாருக்கும் நடக்குமென்றுங்கூட எண்ணமில்லையா?

இந்திய ஆட்சியாளர்களே!
அதிகார வல்லாளரே!
நீங்கள் மாந்தர் தாமா?
வெட்கம்! வெட்கம்! 
இந்தக் கொடுமைகளை நிறைவேற்றவா இலங்கையை நட்பு நாடென்கிறீர்?

உலக நாடுகளின் தலைவர்களே!
மாந்த உரிமை அமைப்புகளே!
ஐ.நா.மன்றமே!
மாந்தர்களே!
நாம் உயிரோடு இருக்கும் காலத்தில்தான் இந்தக் கொடுங் கொடிய பெரும் பேரழிவு நடக்கிறது!

சே!
இதற்குச் சான்றாக இருந்து கொண்டு செயலற்றிருக்கும் இழிவு, 
அட, ஓ! எண்ணிப் பார்க்க முடியாத மானக்கேடு!
விலங்கினும் கீழாக,
பூச்சிப் புழுவாக -
மலத்தில் நெளியும் புழுவாகிப் போனோம்!

-------------------------------------------------------------