'பொதிகை'த் தொலைக்காட்சியில் தமிழ் இழிப்புயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'பொதிகை'த் தொலைக்காட்சியில் தமிழ் இழிப்புயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜனவரி, 2008

'தினமணி' நாளிதழுக்கு...!


அனுபுள்ள ஆசிரியருக்கு...
ஐயா, வணக்கம்.
            இன்று, 10-01-2008 மாலை 06-55 மணியிலிருந்து 07-00 மணிக்குள்ளாக (மாலை 07-00 மணி செய்திகளுக்கு முன்னால்) அரசுத் தொலைக்காட்சி யான பொதிகையில், பாரதியாரின் தமிழ்த்தாய்பாடலை ஒளி/ஒலி பரப்புகையில் மெல்லத் தமிழ் இனி சாகும்என்பதோடு நின்றுவிட்டது. சிறிதுநேர இடைவெளிவிட்டு மெல்லத் தமிழ் இனி சாகும்என்ற நான்கு சொற்களை மட்டும் மீண்டும் கூறியதை நானும் நண்பர்களும் கேட்டோம். இரண்டாம் முறையும் அந்த நான்கு சொற்களுக்கு மேல் வேறு எதுவும் தொடர்ந்து பாடவில்லை. வேறு அறிவிப்புகளும் இல்லை.
            இச் செயல், வேண்டுமென்றே தமிழ்மக்களின் மொழிஉணர்வோடு விளையாடும் செயலாகத் தெரிந்தது. இதைக் கவனித்த எம் புதுவை நண்பர்களும் தொலைபேசிவழி தொடர்புகொண்டு, ‘இச் செயல் தமிழுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளதுஎனக்கூறி அவர்களின் மனக்கொதிப்பை வெளிப்படுத்தினர்.
            அரசுத் தொலைக்காட்சியில் மக்களின் வரிப்பணத்தில் தமிழுக்கு எதிராகக் குறும்பாக நடந்துகொள்வது தமிழ்மக்களுக்கு நெஞ்சக் கொதிப்பையும், அளவற்ற வருத்தத்தையும் கொடுக்கும் செயலாக உள்ளது. எம் நண்பர், தொலைக்காட்சி நிலையத்தைத் தொடர்புகொண்டு இதைப்பற்றிக் கேட்டதற்கு எவரும் பொறுப்பாக விடைதரவில்லை.
            துஞ்சு புலி இடறிய சிதடனின்கதையாக நடந்துள்ள இச் செயல் குறித்துத் தொடர்புடைய அதிகாரிகள் தக்க விளக்கமளித்து, விரும்பத்தாத விளைவுகளைத் தவிர்க்கவேண்டும். இனி எப்போதும் இப்படி நிகழாதிருக்க உறுதியளிக்க வேண்டும்.
            - தமிழநம்பி, விழுப்புரம்.