அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மே, 2010

புதுவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு


புதுவை வலைப்பதிவர் சிறகம் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டைப் புதுவை வணிக அவையில் 16.05.2010 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துகின்றது. 
நிகழ்ச்சி நிரல் 
---------------------------------
16-05-2010 ஞாயிறு

காலை 10 முதல் மாலை 6 மணிவரை

வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
....................................................................................................

தொடக்க நிகழ்வு

காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை 

தலைமை: 
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வரவேற்பு: 
திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள், திரட்டி
மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:
முதுமுனைவர், செந்தமிழ் அந்தணர், கழக இலக்கியச் செம்மல் திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்

தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?என்ற நூல் வெளியீடு :(தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்) 
வெளியிடுபவர் : 
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் 

முதல் படி பெறுபவர்: 
திரு கோ.சுகுமாரன் செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை 
முதல் அமர்வு 

தலைமை : 
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி 

முன்னிலை: 
திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள் 
திரு ம.இளங்கோ அவர்கள் 
திரு க. அருணபாரதி அவர்கள்,மென்பொருள் வல்லுநர். 

கருத்துரை: 

திரு. இராம.கி அவர்கள் பொறியாளர் 
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை 
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை. 
முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள் தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா. 
திரு. விருபா.குமரேசன் அவர்கள்விருபா.காம், சென்னை 
____________________________________________________________________ 
உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை 
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 ____________________________________________________________________ 
பிற்பகல் அமர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை 

தலைமை: திரு. தமிழநம்பி அவர்கள்விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு 

முன்னிலை: 

திரு. வீரமோகன் அவர்கள் 
திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள் 
திரு.ஓவியர் பா.மார்கண்டன் அவர்கள் 

கருத்துரை: 

பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,வாட்டலூ பல்கலைக்கழகம், கனடா.திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா. 
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,தென்மொழி, சென்னை 
திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா. 
திரு. சீனு.அரிமாப்பாண்டியன் அவர்கள், செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி. 
திரு. க.தமிழமல்லன் அவர்கள்தலைவர், தனித்தமிழ் இயக்கம் புதுச்சேரி. 
திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்அமைப்பாளர், செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி. 
திரு. கோ.தாமரைக்கோ அவர்கள், 
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி 
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி 
திரு. எழில். இளங்கோ அவர்கள்தமிழியக்கம், விழுப்புரம். 
நிறைவு நிகழ்வு 

மாநாட்டு நிறைவுரை: 
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் 

நன்றியுரை: 
திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள் புதுவை.காம் 
----------------------------------------------------------------------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும். 
--------------------------------------------------------------------------------------------------- புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் 
20,4-
வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010. 
பேசி: +91 94431 05825 

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,    இணையம் : www.pudhuvaitamilbloggers.org 
வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com 
அனைவரும் வருக, அருந்தமிழ் காக்க!
========================================================== 

திங்கள், 5 அக்டோபர், 2009

புதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு


            
     புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் 4-10-2009 முற்பகலில் புதுவையில் நடைபெற்றது.
            தோழர்கள் இரா.சுகுமாரன் அவர்களும் கோ.சுகுமாரன் அவர்களும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இக் கலந்துரையாடலில் 17 பேர் கலந்து கொண்டனர்.
            2010 சனவரியில் பொங்கல் விழாவிற்கு முன்னர் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கைப் புதுவையில் நடத்துவது என்றும், பயிலரங்கைத் தொடக்கி வைக்கப் புதுவைத் துணைநிலை ஆளுநர் அவர்களை அழைப்பது என்றும் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்தது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்: : 1. இரா.சுகுமாரன்
2. கோ.சுகுமாரன்
3. தமிழநம்பி
4. இரா.முருகப்பன்
5. வீரமோகன்
6. கு.இராமமூர்த்தி
7. எ.சீனுவாசன்
8. வெங்கடேசு
9. க.அருணபாரதி
10. இரா.இராசராசன்
11. சீ. பிரபாகரன்
12. ஆனந்தகுமார்
13. நா.இளங்கோ
14. மகரந்தன்
15. இரா.செயப்பிரகாசு
16. சி.முருகதாசு
17. ந.இரவி

     கலந்துரையாடல் கூட்டச் செய்திகளைப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் வலையிலும் ( http://puduvaibloggers.blogspot.com/ ) காணலாம். மேலும் செய்திகளுக்குக் கைப்பேசி எண் : 94431 05825 ஐத் தொடர்பு
கொள்ளலாம். 

செய்தி : தமிழநம்பி

--------------------------------------------------------------------------

வெள்ளி, 12 செப்டம்பர், 2008

அறிவிப்பு

விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2039  கன்னி(புரட்டாசி) 5
             21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.
இடம் : குரு திருமண மண்டபம்,
கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.
  
காலை 10-00 மணி தொடக்க விழா.
தலைமை :  மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
 தலைவர், தமிழ்ச்சங்கம்.
முன்னிலை :  திரு. பூ.ஆ. நரேஷ்
              முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.
வரவேற்புரை :  திரு. வ.பன்னீர்ச்செல்வன்
         துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை :  திரு. ஏ.சாமிக்கண்ணு
கல்வியாளர், விழுப்புரம்.
தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.
வாணாட்பணி பட்டம் பெறுபவர் : 
எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்
சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.
காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.
நன்றியுரை : திரு. சி.வீரராகவன்
` பொருளாளர், தமிழ்ச்சங்கம்
மாலை 03-00 மணி இயலரங்கம்
பாட்டரங்கம்
தலைவர் : பாவலர் வையவன்
வரவேற்புரை : திரு வீ. சோழன்
இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.
வாழ்த்துரை :  திரு. மு.அனந்தகுமார்
          உதவி திட்ட அலுவலர்,  காஞ்சிபுரம்.
தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?  
     எதைத்தான் கேட்டோம்?
திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.
திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்
  
வள்ளலார் : திரு. தமிழநம்பி
காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்
  
பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி
இசையரங்கம்
அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.
உரையரங்கம்
வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்
         ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்
சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்
           காவல் ஆய்வாளர், விழுப்புரம்.
பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்
  பொருள் : சித்திரச்சிலம்பு
நன்றியுரை :  பாவலர் சீ.விக்கிரமன்
         செயலர், தமிழ்ச்சங்கம்.
அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

ஓர் அறிவிப்பு

தமிழ்ச் சான்றோர் மூவர் - நூற்றாண்டு விழா!
நாள் : தி.பி. கடகம்(ஆடி) (-09-08-2008)
காரி(சனி)க்கிழமை மாலை4-30 மணி
இடம் : சோலைமகால் திருமணமண்டபம்
திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்
தலைமை : எழில்.இளங்கோ
வரவேற்புரை : ஆ.இரவிகார்த்திகேயன்
முன்னிலை : நகர்மன்றத்தலைவர் இரா.கனகராசு
தொடக்கவுரை :மாண்புமிகு அமைச்சர் க. பொன்முடி
1. கப்பலோட்டியதமிழர் வ.உ.சிதம்பரனார்
சிறையில் செக்கிழுத்த நூற்றாண்டு
சிறப்புரை :
சென்னைமாவட்ட நூலக ஆணையத் துணைத்தலைவர்
ஆ.கோபண்ணா
படத்திறப்பு : பொறியாளர் கி.இராதாக்கிருட்டிணன்
2. பொதுவுடைமைப்போராளி பாவலர் தோழர்
ப.சீவானந்தம் நூற்றாண்டு
சிறப்புரை : நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்
திருப்பூர் கே.சுப்புராயன்
படத்திறப்பு : பேராசிரியர் து.திருநாவுக்கரசு
3. இராவணகாவியம் படைத்த புலவர் குழந்தை நூற்றாண்டு
சிறப்புரை : தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன்
படத்திறப்பு: மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
நன்றியுரை : ஆய்தெழுத்து பா.சோதிநரசிம்மன்
நிகழ்ச்சி அமைப்பு: தமிழியக்கம் - விழுப்புரம்

புதன், 7 மே, 2008

ஓர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு

விழுப்பரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.
பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான தொழினுட்ப அறிமுகம் அளிக்கப்படுவர்.
வலைப்பூக்கள் அல்லது வலைப்பதிவுகள் இணைய இணைப்பு தவிர வேறு செலவு ஏதுமின்றி ஒருவர் தம்முடைய கருத்துகளையும், படைப்புகளையும், திறனாய்வுகளையும் உலக மக்களிடம் எடுத்துச் செல்ல உதவுகின்றன. அவ்வலைப்பதிவுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் கையாளவும் பயிற்சி தரப்படுவர்.
விழுப்புரம் பயிலரங்கிற்கு எல்லா வகையிலும் "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்" சார்ந்த திரு.இரா.சுகுமாரன், திரு.கோ.சுகுமாரன் இருவரும் தம் நண்பர்களுடன் பேருதவி செய்கின்றனர்.
பயிலரங்கு காலை 09.00 மணிக்குத்தொடங்கி மாலைவரை நடைபெறும். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி பயிலரங்கைத் தொடக்கி வைக்கிறார். கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட துணைப் பொதுமேலாளர்திரு கே.இரவீந்தரன், கோட்டப் பொறியாளர் திரு.கி.இராதாக்கிருட்டிணன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கருத்துரைக் கின்றனர்.
பகல் உணவுக்கு ஏற்பாடு செய்யதுள்ளனர். தமிழ் மென்பொருள் அடங்கிய குறுவட்டு (C.D) ஒன்று விலை ரூ.15=க்கு பயிற்சி பெறுவார்க்கு தரப்படும். பயிற்சிக்கெனக் கட்டணம் ஏதும் இல்லை.
பயிற்சிபெற விரும்புவார் கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்க:
94434 40401, 99527 41221, 94437 36444. மின்னஞ்சல்: thamizhanambi44@gmail.com
-விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்.