வெள்ளி, 13 அக்டோபர், 2017

நன்றியறிவிப்பு

                           நன்றியறிவிப்பு
                           -----------------
                என் துணைவியாரின் மறைவையொட்டி நேரிலும், தொலைப்பேசி வழியாகவும் மடல் வழியாகவும் ஆறுதல் கூறித் தேற்றித் துணையிருந்த நண்பர்கள் உறவினர்கள் ஏனை அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த அதிர்ச்சியினின்றும் மீண்டு வர உங்களின் அன்பும் ஆறுதலும் பெரிதும் துணையாயிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேன்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற,அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!   - புறம்.194.

(பக்கு உடுக்கை நன்கணியார் பாடல்)

அன்பார்ந்த உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி!
அன்பன்,
தமிழநம்பி.