ஆற்றாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆற்றாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!

1 2 ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!
   
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றா'யே ! பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனெனப்
பேருனக்கேன் சீச்சீ பிழை ! 3 4 


எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின் 
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! நல்லார் 
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி 
அமிழா திருக்கும் அமர். 5 6 



கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப் 
பங்கேற்றார் தில்லியுடன் பார் ! 



ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! ஏய்த்திட்டாய் !
சீச்சீ ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !
தீச்செயலில் தில்லி திளைத்து. 9 0 



ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில் 
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! ஈடு 
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே 
உலகிலறம் ஓய்ந்ததென ஓது !  

-----------------------------------------------------------------------------------------