புதன், 7 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – உ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! .
----------------------------------------------------

தமிழா,

உன்மொழி உயர்மொழி; தனிமொழி; செம்மொழி.
அதைப்படைத்தவன் அறிவியல் நுண்ணியன்.

அதனை அறியும் அறிவு உனக்கு உண்டா?
அதனை உணர்ந்து வளர்க்கும் திறன் உனக்கு உண்டா?

அதனை அழிக்கின்றவன் கயவன் என்று என்றாவது எண்ணியது உண்டா?
அழிப்பான் அழிப்புக்கு நீ இடமதராமல் இருந்தாயா?
அழிக்க நீதானே முந்து நின்றாய்!

நீ, நீயாக என்றாவது இருந்தாயா?
எவனெவனையெல்லாம் தூக்கிச் சுமந்தாய்!

இருப்பவரை ஏறிட்டுப் பாராமல் செத்தாரைத் தேடித் தூக்கிச் சுமக்கும் நீ, என்று திருந்துவாய்?

உன்னை உணராத நீயா உலகை உணர்வாய்?  


(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம் 2,3.,  2016., திருவள்ளுவர் நிலையம்,  7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006.)

-----------------------------------------------------------------------