வியாழன், 4 செப்டம்பர், 2008

அண்ணா- நூற்றாண்டு நினைவு!


இருபத்து நான்கு வரிகளில் -                                                                
அண்ணாவின் இனிய நினைவேந்தல்!       


அண்ணா!  அட,ஓ!  எண்ணம்  இனிக்கும்                             திண்ணியர்  திருப்பெயர்!  ஈரா  யிரமாண்
டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது!

ஆரையும்  விடவும்  ஆரிய  அரவை                                        -5            
நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய 
ஒருதனிப் பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்                 தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது!

மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய                                  
ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது!                                 -10

தாய்நிலந் தன்னைத் தமிழ்நா  டென்றே                         வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது!
ஆட்சியில்  கல்வியில்  காட்சியில் இசையில்
நீட்சி  தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி                       
நலக்கலை  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்             -15  
சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது!

செத்ததை விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!

பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய
சிறப்பறு 'ஆரிய மாயை'  செறுத்தவர்!                                  -20

தமிழர் உணர்வுத் தழல்'தீப் பரவுக'!
இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென                    
ஆர்த்தவர்;  உழைத்தவர்;  அதன்வழி
சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே!                         -24


***************************************************************





2 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

"உலகெல்லாம் தமிழர் இருக்கிறார்கள்; ஆனால் மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்" என மலேசியத் தமிழர்களுக்கு மகுடம் சூட்டி மகிந்த பேரறிஞர் அண்ணா அவர்களை அவருடைய நூற்றாண்டு நினைவுநாளில் உள்ளத்தில் நினைந்து போற்றி வணங்குகிறேன்.

தமிழநம்பி சொன்னது…

நன்றி ஐயா!