மொழிமீட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிமீட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜூன், 2017

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.



முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.
============================================================


தமிழா,

நாட்டு விடுதலைக்கு முன்னது மொழி விடுதலை.
அதனைப் பெற  நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர் எண்ணவில்லை!
மாநில மொழிகள் அனைத்தும் மைய மொழியாக வேண்டும் என்று குரலெழுப்பவில்லை.

பாவாணர் எழுதினார்!
மாநிலப்பிரிவின் போதே செய்தாக வேண்டும் என்றார்!

அரசு - முடியரசு கூடச்சான்றோர் சொல்லை மதித்து நடந்தது!
குடியரசு ஆன பின்னரோ சான்றோர் உரையைக்கேட்கும் அரசாக எதுவும் வரவில்லை!

ஏய்ப்பரும் மேய்ப்பரும் ஆகியவர்க்குச் சால்பாவது, சான்றோர் உரையாவது ஏறுமா?

தமிழா, பூச்சால் நடைபெறாது!
புனைந்து பாடுதலால் வராது!

போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்
தேரோட்டம் இல்லை தெளி
என்னும் மாணிக்கவுரை என்றும் மாணிக்க உரையே!

தாய்மொழிக்கு எல்லா வழிகளும் முதன்மை தராத நாடு, தாய்நாடு என ஆகுமா?
தாய் பெற்ற பிள்ளை ஆளும் நாடாகுமா?
ஆக்கத் தந்நலச் சூழ்ச்சியர் விடுவரா?

ஒன்றிய நாடுகள் உலகில் இல்லையா?
அவரவர் மொழியுரிமை காத்துப் பொதுமை  பேணும் நாடு இல்லையா?

மலையகம் சிங்கையில் உள்ள மொழியொன்றியம் இந்தியம் கொள்ளாதது ஏன்?

உனக்கு ஆக்கமாம் அரசா இந்திய அரசு? அழிவாம் அரசு!
உணர்ந்தால்.,

இந்தியக் கொத்தடிமையை ஒழிக்காமல் கிடப்பாகக் கிடப்பாயா?

ஏக  இந்தியம் என வாய் வருமா?      

*           *           *           *           *           *           *           *           *           *           *           *
(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22,23 ., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
---------------------------------------------------------------------------