திங்கள், 7 நவம்பர், 2016

பாவாணர் விளக்கும் மதிப்படைச் சொற்கள்



பாவாணர் விளக்கும் மதிப்படைச் சொற்கள்


 
..இளந்தை (youth) கடந்த ஆடவர் பெயருக்கு முன்: திருவாளர் (Mr.)
இளந்தை கடந்த பெண்டிர் பெயருக்கு முன்: திருவாட்டி(Mrs.)
கண்ணியம் வாய்ந்த ஆடவர் பெயருக்கு முன்: பெருமான்
கண்ணியம் வாய்ந்த ஆடவர் பெயருக்கு முன்: பெருமாட்டி....
இளந்தை = இளமை...

மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகிநிற்கும்போது முற்றுப்புள்ளி பெறவேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மையுணர்த்தும் திரு என்னும் சொல்லோ டொப்பக்கொண்டு மயங்க நேரும்.
எ-டு: திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்)
     திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்)
இறையடியார் பெயரே, பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை.

துறவியர் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், 
மறையொழுக்கத்தினர் பெயருக்குமுன் மறைத்திரு என்பதனையும் அடைச்சொல்லாக ஆளலாம்.
எ-டு: தவத்திரு குன்றக்குடியடிகள்
     தமிழ்த்திரு மறைமலையடிகள்
     மறைத்திரு மணியம் அவர்கள்

சிறீலசிறீ என்னும் சிவமடவழக்கை திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம்.
திருமதி என்னும் அடைச்சொல், திரு என்னும் தென் சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையும் கொண்ட இருபிறப்பி (hybrid) ஆதலால், உதை அறவே விலக்கல் வேண்டும். 
திருமகன் திருமான் >சிறீமத் (வடமொழி) சிறீமதி (பவண்பால்)
திருவாட்டி சிறீமதி
திருவாட்டி என்னும் தூய தென்சோல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது,
பேதைமை என்ப தியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்                      - (குறள்.831)
என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம்….

இனி, மதிப்படைச்சொற்கள் (1) முன்னடைச்சொற்கள் (2) பின்னடைச்சொற்கள் என இரு வகைய.
கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப்பின் அவர்கள் என்று குறிப்பது பின்னடைச்சொல்லாகும்.அது உயர்வுப்பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை.
எ-டு: திரு. மாணிக்கவேல் அவர்கள்

ஆற்றலும் தேர்வுப்பட்டமும்:
புலமையும் தொழிலும் குறித்துவரும் சோற்கள் முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை.
எ-டு: பண்டிதமணி கதிரேசனார்
     புலவர் சின்னாண்டார்
     பேராசிரியர் சொக்கப்பனார்
     மருத்துவர் கண்ணப்பர்
     புதுப்புனைவர் கோ.துரைசாமி...
பேராசிரியர் என்பதை பேரா. என்று குறுக்கலாம்.

சிலசொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப்பெறும்.
எ-டு: புலவர் புகழேந்தியார், புகழேந்திப் புலவர்...

அவர்கள் என்னும் பின்னடையை எவர் பெயர்க்கும் பின் குறிக்கலாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொருத்தது...

அரசியல் பதவிகள் பற்றிய முன்னடைகள்:
The Hon’ble                 : பெருந்தகை
The Right Hon’ble        : மாபெருந்தகை
His Worship                 : வணங்குதகை
His Lordship                 : குருசில்தகை
His Excellency  : மேன்மை தங்கிய
His Highness                 : உயர்வு தங்கிய
His Majesty                  : மாட்சிமை தங்கிய

மதவியல் பற்றிய முன்னடைகள்:
Rev.                             : கனம்
Rt. Rev.                        : மாகனம்
His Grace                     : அருட்டிரு
His Holiness                 : தவத்திரு

(பாவாணர் தமிழ்க்களஞ்சியம் -33, தமிழ்மண், சென்னை-17)
-------------------------------------------------------------