நேரிசை வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேரிசை வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 செப்டம்பர், 2009

மூன்று வெண்பாக்கள்!

            'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டிப் பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்கின்றனர்.
கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :

  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நன்றாகச் செய்க நயந்து 
என் பாடல் : 
நாடு நனிநல்ல! நாடா தொதுக்கிடுக 
கேடு விளைக்கின்ற கீழ்மைகளை! - தேடுபணி 
பொன்றாப் புகழும் பொதுநலனும் நாடிமிக 
நன்றாகச் செய்க நயந்து! 


  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நெஞ்சில் எரியும் நெருப்பு 
என் பாடல் : 
தன்னல வாழ்வே தமதாக்கித் தம்குடும்ப 
இன்னலம் தன்னையே எண்ணிடுவார்! - என்றென்றும் 
வஞ்சஞ் செயவஞ்சார் வாழ்வை நினைக்கையில் 
நெஞ்சில் எரியும் நெருப்பு. 


  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : என்றும் திருநாள் எனக்கு 
என் பாடல் : 
வீதிதொறும் மாழ்கமது! வேகவுணா! ஊதுபுகை! 
ஊதியமும் கிம்பளமும் உண்டய்யா! ஏதிங்கே
ஒன்றிவரா மேலாள்! ஒருக்காலும் சிக்கலிலை! 
என்றும் திருநாள் எனக்கு!

--------------------------------------------------------------------------------------------------