திங்கள், 10 டிசம்பர், 2012

தாமரையம்மையார் மறைவு – கையறுநிலை!








தாமரையம்மையார் மறைவு கையறுநிலை! 

(குறிப்பு: பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் துணைவியாரும் பல்லாயிரக்கணக்கான மெய்த்தமிழ் நெஞ்சங்களின் ஈடிணையில்லா அன்பு அம்மாவுமாகிய தாமரையம்மையார்  7-12-2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இயற்கையெய்தினார்)

அன்பின் அடையாளம்; அஃகலிலா பாசத்தின்
இன்னுருவம்; ஈடில்லா நற்றாயே!  என்றும்
தமிழ்நெஞ்சர் ஏற்றுகின்ற தாமரை அன்னாய்!
அமிழாப் புகழ்சேர் அருளே!  இமிழுலகின்
துன்பங்கள் போதுமெனத் தூங்கினிரோ? அன்றியின்றே
அன்பழைப்பு ஐயா விடுத்தாரா? என்செய்வோம்
எங்களுக் கிங்கார் இனி?                                                            
--------------------------------------------------------------