தமிழ்நாட்டுத் தமிழர் என்ன செய்ய வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாட்டுத் தமிழர் என்ன செய்ய வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 செப்டம்பர், 2016

ஒரு பணிவான வேண்டுகோள்!



ஒரு பணிவான வேண்டுகோள்!

கருநாடகத்தில் தமிழர்களைக் கன்னடர் தாக்குகின்றனர்; தமிழர் உடைமைகளைத் தீக்கிரையாக்குகின்றனர் என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

கருநாடகத்தில் அடுத்த தேர்தல் நெருங்கிவரும் நேரமாக இருப்பதால், அங்கு அரசியல் கட்சிகள் ஞாயம் நேர்மையின்றி தமிழர்க் கெதிராகக் கன்னடரிடம் வெறியுணர்வைத்
தூண்டிவிடுவதைக் காணமுடிகின்றது.

தமிழகத்தில் உள்ள நம் கவலைகள், கருநாடகத்தில் உள்ள தமிழரை, வெறியுணர் வேற்றப்பட்ட கும்பல்களிடமிருந்து காப்பாற்ற உடனடியாக உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டு மென்பதே!

நடுவணரசின் போக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், தமிழக அரசு நடுவணரசை வலியுறுத்தி கருநாடத் தமிழரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவைக்கவேண்டும்! தமிழக அரசு அவ்வகையில் செயலாற்ற வலியுறுத்துவோம்!

இன்றைய நிலையில், கன்னடக்காரர்களை இங்கு தாக்க முயல்வதோ, அவர்கள் உடைமைகளுக்குத் தீங்கிழைக்க எண்ணுவதோ எந்த நற்பயனையும் தராது என்பது மட்டுமின்றி, மென்மேலும் அங்கு தமிழர்களுக்குக் காப்பில்லாத நிலையையே தொடரச்செய்யும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

தமிழக அரசை உடனடியாகச் செயலாற்ற வலியுறுத்துவோம்! நடுவணரசு நடவடிக்கை எடுக்கச்செய்வோம்! அதுவே இக்கால் நாம் செய்ய வேண்டியதாகும்!

நம் செயல்கள் கருநாடகத்தில் உள்ள நம் உறவுகளுக்குத் தீங்கின்றிக் காக்கும் வகையில் அமையட்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி!
-----------------------------------------------------------