திங்கள், 5 அக்டோபர், 2009

புதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு


            
     புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் 4-10-2009 முற்பகலில் புதுவையில் நடைபெற்றது.
            தோழர்கள் இரா.சுகுமாரன் அவர்களும் கோ.சுகுமாரன் அவர்களும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இக் கலந்துரையாடலில் 17 பேர் கலந்து கொண்டனர்.
            2010 சனவரியில் பொங்கல் விழாவிற்கு முன்னர் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கைப் புதுவையில் நடத்துவது என்றும், பயிலரங்கைத் தொடக்கி வைக்கப் புதுவைத் துணைநிலை ஆளுநர் அவர்களை அழைப்பது என்றும் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்தது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்: : 1. இரா.சுகுமாரன்
2. கோ.சுகுமாரன்
3. தமிழநம்பி
4. இரா.முருகப்பன்
5. வீரமோகன்
6. கு.இராமமூர்த்தி
7. எ.சீனுவாசன்
8. வெங்கடேசு
9. க.அருணபாரதி
10. இரா.இராசராசன்
11. சீ. பிரபாகரன்
12. ஆனந்தகுமார்
13. நா.இளங்கோ
14. மகரந்தன்
15. இரா.செயப்பிரகாசு
16. சி.முருகதாசு
17. ந.இரவி

     கலந்துரையாடல் கூட்டச் செய்திகளைப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் வலையிலும் ( http://puduvaibloggers.blogspot.com/ ) காணலாம். மேலும் செய்திகளுக்குக் கைப்பேசி எண் : 94431 05825 ஐத் தொடர்பு
கொள்ளலாம். 

செய்தி : தமிழநம்பி

--------------------------------------------------------------------------