உழவு இழிவா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழவு இழிவா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 செப்டம்பர், 2016

சமற்கிருத நூல்கள் அறிவுறுத்துவன யாவை? - பாவாணர் விளக்கம்!



சமற்கிருத நூல்கள் அறிவுறுத்துவன  யாவை?           - பாவாணர் விளக்கம்!



...சமற்கிருத நூல்களோ, பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நாற்குலங்களையும் இறைவனே படைத்தான் என்றும் அங்ஙனம் படைத்ததாக இறைவனே சொன்னான் என்றும் (பகவற்கீதை-4:13),

புருடன் (புருஷ) என்னும் உயிரின மூல வடிவத்தின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்றும் (இருக்குவேதம் 10ஆம் மண்டிலம், 90ஆம் மந்திரம் புருஷசூக்தம்),

பிராமணனுக்கு மற்ற மூவரும் தொண்டுசெய்ய வேண்டுமென்றும்,

துறவும் வீடுபேறும் பிராமணனுக்கே உரியனவென்றும்,

முக்குண வேறுபாட்டாலும் பழவினையாலும் நாற்குலமும் அமைவதாற் குலம், பிறவிபற்றியதென்றும்,

நாற்குலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவை யென்றும்,

ஒருவன் எவ்வெத் தொழிலை மேற்கோள்ளினும் அவன் குலம் அவன் இறக்கும்வரை மாறாதென்றும்,

நாற்குலத்தாரும் முறையே வேதமோதி வேள்வி வளர்த்தும், போர்செய்து காவல் மேற்கொண்டும், வணிகமும் உழவும் ஆற்றியும், கைத்தொழிலுங் கூலிவேலையுந் தொண்டுஞ் செய்தும் வாழவேண்டுமென்றும்,

பிராமணன் சமையத்திற்கேற்ப எந்த வேலையும் மேற்கொள்ளலா மென்றும், அவன் நிலத்தேவன் (பூசுரன்) என்றும்,

வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழையாரியம் தேவமொழியென்றும்,

உண்டி உடை உறையுள், உடைமை, பெயர், பழக்க வழக்கம், சடங்கு, தண்டனை முதலிய எல்லாவகை நிலைமைகளும் குலத்திற்கேற்ப வேறுபட்டிருத்தல் வேண்டுமென்றும்,

இத்தகைய பிறவுமே கூறுகின்றன.

     சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
     உழந்தும் உழவே தலை.`            -(கு.1031)
     உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
     தெழுவாரை யெல்லாம் பொறுத்து.          (கு.1032)
     உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
     தொழுதுண்டு புன்செல் பவர்.          -(கு.1033)
     பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
     அலகுடை நீழ லவர்.       -(கு.1034)
     இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
     கைசெய்தூண் மாலை யவர்.          -(கு.1035)
     உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
     விட்டேம் என்பார்க்கு நிலை.          (கு.1036)
என்றது தமிழ் அறநூல்.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?: என்றது வடமொழி அறநூல்.(-மநுதர்ம சாத்திரம் இராமாநுசாசாரியார் மொழிபெயர்ப்பு. 10:84)     
.....  
--------------------------------------------------------------