இழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜனவரி, 2010

இழிவொடு யாமுறைகின்றோம்!

*                    (எழுசீர் மண்டிலம்) * 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்! 

--------------------------------------------------------------------------
\

வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!

1 2 ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!
   
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றா'யே ! பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனெனப்
பேருனக்கேன் சீச்சீ பிழை ! 3 4 


எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின் 
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! நல்லார் 
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி 
அமிழா திருக்கும் அமர். 5 6 



கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப் 
பங்கேற்றார் தில்லியுடன் பார் ! 



ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! ஏய்த்திட்டாய் !
சீச்சீ ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !
தீச்செயலில் தில்லி திளைத்து. 9 0 



ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில் 
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! ஈடு 
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே 
உலகிலறம் ஓய்ந்ததென ஓது !  

-----------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 17 மே, 2009

புழுவாகிப் போனோம்!



உலகமே! 
நீ குருடா?
செவிடா?

ஐயோ!
உலகில் மாந்த உணர்வே அற்றுப் போனதோ?
ஒரே நாளில் 25000 மாந்த உயிர்கள் சுடப்பட்டும் காயம்பட்டும் எரியுண்டும் பொசுங்கியும் சாவதா?

ஐ.நா. மன்றமே! 
அமெரிக்காவே!
மாந்த உரிமைகள் பற்றிய உங்களின் பேச்செல்லாம் இவ்வளவுதானோ?
, ஈழத்தமிழன் வெள்ளைத் தோலன் இல்லை என்பது காரணமோ? 

உலக நாடுகளே!
உங்கள் நாடுகளில் மாந்த நேயம் பற்றி எந்த அறிஞனும் எழுதவில்லையா? பேசவில்லையா?
ஈழத்தமிழருக்கு இன்று நேர்வது நாளை யாருக்கும் நடக்குமென்றுங்கூட எண்ணமில்லையா?

இந்திய ஆட்சியாளர்களே!
அதிகார வல்லாளரே!
நீங்கள் மாந்தர் தாமா?
வெட்கம்! வெட்கம்! 
இந்தக் கொடுமைகளை நிறைவேற்றவா இலங்கையை நட்பு நாடென்கிறீர்?

உலக நாடுகளின் தலைவர்களே!
மாந்த உரிமை அமைப்புகளே!
ஐ.நா.மன்றமே!
மாந்தர்களே!
நாம் உயிரோடு இருக்கும் காலத்தில்தான் இந்தக் கொடுங் கொடிய பெரும் பேரழிவு நடக்கிறது!

சே!
இதற்குச் சான்றாக இருந்து கொண்டு செயலற்றிருக்கும் இழிவு, 
அட, ஓ! எண்ணிப் பார்க்க முடியாத மானக்கேடு!
விலங்கினும் கீழாக,
பூச்சிப் புழுவாக -
மலத்தில் நெளியும் புழுவாகிப் போனோம்!

-------------------------------------------------------------