வியாழன், 22 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – அ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! அ.
-----------------------------------------------------------------------------------


 தமிழா,
உன் தாய்மொழியிலுள்ள இசைப்பாக்கள் எவைஎவை எனத் தெரியுமா?

பெருந்தேவபாணி, தேவபாணி, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, பாவைப்பா, பள்ளி எழுச்சி, வரிப்பா வகை, வண்ணவகை, சிந்துப்பா-
இவ்வளவு மட்டுமா?

உன் இசையெல்லாம் ஒருங்குசேர்த்தாலும் ஒரு பகுதிதானும் ஒட்டாத நால்வகைப்பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மட்டுமா?

தாலாட்டு, கும்மி, ஒயில், ஒப்பாரி என எத்தனை எத்தனை வகை!

இதனை இசை இல்லையென்று இதனைமறைக்க, ஒழிக்க எவரோ இட்டுக்கட்டிச் சொன்னால் நீ ஒப்புவது,,,,
உன்னினத்தையே பெற்ற இசைத்தாயை மலடி என்று பழிப்பது போலல்லவா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
------------------------------------------------------------------------------------------------------------