செம்மொழி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடு!

செம்மொழி மாநாடு!

(பஃறொடை வெண்பா)


உலக்கை விழுங்கியவன் உற்றநோய் நீக்கும்

இலக்கில் கொதிசுக் கிறுத்தே கலக்கிக்

குடித்தகதை ஈழத்தே கொன்று குவிக்க

நடித்துத் துணைபோன நாணார் துடித்திழைத்த

செம்மொழிமா நாடென்றே செப்பு.

------------------------------------------------

திங்கள், 28 ஜூன், 2010

குமுறலில் எழுந்த பா மூன்று!

*
1. பஃறொடை வெண்பா

எத்தனென நன்னடிப்பால் இன்னினத்தைக் கொன்றொழிக்க
மொத்தமுமாய் உன்துணையை முன்னளித்தாய் ஒத்தாரே
இல்லா இழிஞா! இரண்டகனே!   – புல்லுருவே!
பொல்லாப் பழிமாற்ற பொய்ம்முகத்தில் செம்மொழிக்கே
மாநாடென் றேய்ப்பதுமேன்? மாசு.


2. நேரிசை வெண்பா

அரிய திறத்தோடே ஆற்றல் முனைப்பில்


எரியும் உணர்வோ டெழுந்தார்! – உரியமண்



மீட்க முயன்றாரை மீளா அடக்குமுறைக்



கோட்டிய தன்னலத்தை ஓர்.



3. நேரிசை வெண்பா

செம்மொழிமா நாடாம்! சிறப்பாம்! நடத்தினவர்

நம்பக் கழுத்தறுக்கும் நன்னடிகர்! – விம்மலுறும்

ஈழத் தமிழன் இழிவழிவுக் காளாகக்

கீழ ரிவர்துணையர், கேள்.
*
*