செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

செந்தமிழ் நாட்டுச் சிங்காரவேலர்!

செந்தமிழ் நாட்டுச் சிங்காரவேலர்!


செந்தமிழோ டாங்கிலத்தில் செந்திறப்பேச் செழுத்தும்
     சேர்ந்துசிறந் தொளிர்ந்தவர்பேர் சிங்கார வேலர்!

இந்தியாவின் விடுதலைப்போர்க் கெழுந்தாருள் மூத்தார்!
     இவர்நேர்மை போர்க்குணத்தால் ஈர்ப்புற்றார் காந்தி!

சிந்தனையின் சிற்பியெனச் செந்தமிழர் அழைத்தார்!
     சீறுபுரட் சிப்புலியென்(று) அண்ணாவும் சொன்னார்!

அந்நாளில் ஆசியக்கண் டந்தனிலே முன்னே
     ஆர்த்தெழுந்த பொதுமையியக் கத்தரிவ  ரன்றோ?   

1 கருத்து:

test சொன்னது…

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்