புதன், 3 ஜூன், 2009

ஐயா திருமுருகனார் மறைவுக்கு இரங்கல்!

.
.


ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும்

. ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி !

தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம் ?

. தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின் !

ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார்

. இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி !

ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள்

. அருந்திருமு ருகனாரே ! அழுகின் றோமே !



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக