புதன், 8 ஜூன், 2011

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு!

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு...!

இரண்டகஞ் செய்தே இனக்கொலைக் குத்துணை             போனவரை
முரண்படப் பேசி மொழிநலந் தீய்த்தவம் மொய்ம்பிலரை
உரங்கெட வீழ்த்தின ராட்சி பறித்தார்  
உணர்ந்திடுக!                
நிரந்தினி தாள்க! நெடுந்தன் முனைப்பை        நிறுத்துகவே!

திங்கள், 16 மே, 2011

பாவாணரின் மடல்கள்

   பாவாணரின் மடல்கள்

       அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், தமிழ்த் தொண்டின் நிலை கூறும் ஆவணமாகவும், அறிவாற்றல் சான்ற வீற்றின் வெளிப்பாடாகவும் பாவாணர் மடல்கள் இருக்கின்றன.
தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு நலன்களின் மீட்பில்  நாட்டமுள்ள தமிழிளையோர் தவறாது அறியவேண்டிய பல செய்திகளையும் அவர் மடல்கள் தருகின்றன.
---------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. பாவாணர் கடிதங்கள்                    : புலவர் இரா. இளங்குமரன்
  (கழகம், 1985)
2. பாவாணர் பாடல்களும் மடல்களும்      : இரா. இளங்குமரன்
  (விகனேஷ் வெளியீடு, 2006)
3. தேவநேயப் பாவாணர்                   : இரா. இளங்குமரன்  
  (சாகித்திய அக்காதமி, 2002)
4. பாவாணர் வரலாறு                     : இரா. இளங்குமரன்
  (கழகம், 2000)
5. தென்மொழி (சுவடி: 7, ஓலை: 6-7)  :ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.        
நன்றி!
_______________________________________________________________________________________