ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

உய்வு உண்டா?

உய்வு உண்டா?

ஆங்கீழத் தெம்மோர் அழியத் துணைபோனாய்!

ஈங்குந் தமிழரை ஏய்த்திடுவாய்! ஓங்கிவரும்

தன்னலப் போக்கால் தகையிழந்தாய், தாய்க்கொல்லி!

உன்றனுக் கென்றுமிலை உய்வு.


-----------------------------------------------------

புதன், 25 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடு!

செம்மொழி மாநாடு!

(பஃறொடை வெண்பா)


உலக்கை விழுங்கியவன் உற்றநோய் நீக்கும்

இலக்கில் கொதிசுக் கிறுத்தே கலக்கிக்

குடித்தகதை ஈழத்தே கொன்று குவிக்க

நடித்துத் துணைபோன நாணார் துடித்திழைத்த

செம்மொழிமா நாடென்றே செப்பு.

------------------------------------------------

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

எப்படித் தீர்ப்பது?

எப்படித் தீர்ப்பது?

(வெளி மண்டிலம்)


செந்தமிழ் வேங்கையைச் சிங்களன் கொல்வதோ? – தமிழிளைஞ!

முந்தியித் தாலியின் மூளிப் பேய்துணை – தமிழிளைஞ!

சொந்த இனங்கொலத் துணையருட் செல்வனும் – தமிழிளைஞ!

இந்தக் கணக்கினை எப்படித் தீர்ப்பதோ? – தமிழிளைஞ!


__________________________________________________________________